• If you are trying to reset your account password then don't forget to check spam folder in your mailbox. Also Mark it as "not spam" or you won't be able to click on the link.

Adultery ஏழு நிமிடங்கள் ( Completed )

Mohan Ahuja

Active Member
1,339
266
63
டாக்டர் அமுதா மணிவண்ணன் MBBS, DPM. PhD.

அன்பும் அமைதியும் வடியும் அழகான முகத்தோற்றம். முன் ஐம்பதுகளிலும் இளமை குன்றாத உடலமைப்பு இருப்பினும் பார்ப்பவர் கையடுத்துக் கும்பிடத் தோன்றும் கம்பீரம், பதவிசு. அவரது கணவர் மணிவண்ணன் ஒரு புகழ் பெற்ற தொழிலதிபர். பணத்துக்குப் பஞ்சமில்லாத வாழ்வு. தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற குறிக்கோளுடன் தன் மணவாழ்கையில் கண்ட வெற்றியின் ரகசியங்களை தன் கல்வித்திறனுடன் மற்றவருக்குப் புகட்டி பல முறிந்து போன, முறியப் போகவிருந்த திருமணங்களின் விதியை மாற்றியமைத்தவர். பெங்களூர் நகரத்தில் திருமண கோர்ட் வளாகங்களில் முறிந்து போன மணவாழ்க்கைகளுக்கு புத்தூர் மருத்துவர் எனப் பெயர் பெற்றவர்.

அவரது கவுன்ஸல்லிங்க் செண்டரில் இருந்த ஒரு கலந்தாலோசனை அறை.

அவருக்கு எதிரில் இருந்த இருக்கைகளில் ஒன்றில் ... எல்லோராலும் விஸ்வா என்று அழைக்கப் படும் விஸ்வநாத் அமர்ந்து இருந்தான். ஆறடி உயரம், சற்றே கருத்த மாநிறம், பார்த்தவுடன் ராணுவத்தில் பணிபுரிபவன் அல்லது பணி புரிந்தவன் என்று அவன் முறுக்கேறிய உடலும் முடி வெட்டும் பரைசாற்றின. தான் கட்டிக் காத்த ஆறுவருட மணவாழ்க்கை தன் கண்முன்னே தவிடு பொடியாவதால் அவன் மனத்தைப் பிழிந்த துக்கம் முகத்தில் தெரியக் கூடாது என்ற அவன் பிர்யர்த்தனத்துக்கு அவனது ராணுவப் பயிற்சி உதவுவதை டாக்டர் அமுதா நன்கு உணர்ந்தார்.


அவனுக்கு அடுத்த இருக்கையில் வனிதா விஸ்வநாத் அமர்ந்து இருந்தாள். முப்பதிலும் முன் இருபதுகளை தாண்டாத, பிரம்மன் செதுக்கி வைத்த உடல் வாகு. பார்ப்பவரை சுண்டி இழுக்கும் வசீகர முகம். பல நாட்களாக அவள் அழுது புலம்பி தன் தூக்கத்தை தொலைத்துக் கொண்டு இருப்பதை அவள் முகத்தில் இருந்த சோகையும், வீங்கிய கண்களும் இரத்தச் சிவப்பாக சிவந்த மூக்கும் வெட்ட வெளிச்சமாக்கின. பல வருடங்களுக்கு முன் வனிதா சுப்ரமணியனாக பெங்களூர் செயிண்ட் ஜோஸப்ஸ் கல்லூரியில் வலம் வந்து கொண்டு இருந்த போது அக்கல்லூரி வாலிபர்கள் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டு போயிருந்தாலும், பூனே ராணுவக் கல்லூரியில் இருந்த விஸ்வனாதனை நினைத்து ஒவ்வொரு நாளும் தன் பெயரை வனிதா விஸ்வநாத் என்று பல முறை எழுதியும் அவ்வாறே கையொப்பம் இட்டும் தன்னைப் பழக்கிக் கொண்டு இருந்தவள். ஆனால் இப்போது அந்தப் பட்டப் பெயர் தன்னிடம் இருந்து பறிக்கப் பட்டு தன் வாழ்க்கையே இருண்டு போவதை தவிற்க முடியாமல் பலியாட்டுக் களையுடன் இருந்ததும் டாக்டர் அமுதாவுக்குத் தெள்ளெத் தெளிவானது.

விஸ்வநாத் ஸ்ரீவத்சன் என்ற பெயரை அவர்களுடைய கேஸ் ஃபைலில் பார்த்தவுடன் யார் அந்த ஸ்ரீவத்சன் என்று விசாரிக்க அது தனக்கு ஒரு அளவுக்கு பழக்கம் ஆன டாக்டர் ஸ்ரீவத்சன் என்பதை அறிந்ததும் அவருடன் நடந்த தொலைபேசி உரையாடலை டாக்டர் அமுதா நினைவு கூர்ந்தார் ...

அமுதா, "ஹெல்லோ டாக்டர் நான் சைக்கியாட்ரிஸ்ட் அமுதா பேசறேன்"

ஸ்ரீவத்சன், "சொல்லுங்க டாக்டர். எப்படி இருக்கீங்க? மணிவண்ணன் சார் எப்படி இருக்கார்?"

அமுதா, "ஐ ஆம் ஃபைன் டாக்டர். அவரும் ஓ.கே"

ஸ்ரீவத்சன், "உங்ககிட்டே இருந்து ஃபோன் கால் வரும்ன்னு எனக்குத் தெரியும். ஆனா இவ்வளவு சீக்கிரமா கூப்பிடுவீங்கன்னு எதிர்பார்க்கலை"

அமுதா, "அப்படின்னா நேரா விஷயத்துக்கு வர்றேன். ஏன் இந்த விவாகரத்து?"

ஸ்ரீவத்சன், "Honestly? I don't know. ரெண்டு பேரும் எதுவும் சொல்ல மாட்டேங்கறாங்க. என் தங்கையும், அதாவுது வனிதாவின் அம்மா, அவளும் என் ப்ரதர் இன் லாவும் ரொம்ப குழம்பிப் போயிருக்காங்க"

அமுதா, "ஓ, வனிதா உங்க தங்கை மகளா?"

ஸ்ரீவத்சன், "என் ட்வின் ஸிஸ்டரோட மகள்"

அமுதா, "ஓ அதான் இவங்களுக்கும் ட்வின்ஸ் பிறந்து இருக்கு"

ஸ்ரீவத்சன், "விஸ்வாவும் ட்வின்ஸில் ஒருத்தன்தான். அவனோட ப்ரதர்தான் டாக்டர் ராமமூர்த்தி"

இளம் வயதிலேயே புகழ் பெற்ற நியூரோ சர்ஜனான டாக்டர் ராமமூர்த்தியையும் கேஸ் ஃபைலில் பார்த்த விஸ்வனாதனின் புகைப் படத்தையும் நினைவு கூர்ந்து அவர்கள் இருவருக்கும் இடையே உருவ ஒற்றுமை இல்லாததை உணர்ந்த அமுதா, "வாவ், மேல்-மேல் டைஸைகாட்டிக் ட்வின்ஸா (Male–male dizygotic twins - முழு உருவ ஒற்றுமை இல்லாத இரட்டைப் பிறவியர்)?"

ஸ்ரீவத்சன், "எஸ்"

அமுதா, "Sorry for the digression. சோ, அவங்களோடது அரேஞ்ச்ட் மேரேஜா?"

ஸ்ரீவத்சன், "நாட் அட் ஆல். என் தங்கைக்கு என் மகன்களில் ஒருத்தனுக்கு தன் மகளைக் கொடுக்கணும்ன்னு ரொம்ப ஆசை. எனக்கும் ஒரு அளவுக்கு அதில் ஒப்புதல் இருந்தது. ஆனா நாங்க எந்த முடிவும் எடுக்கும் முன்பே இவங்க ரெண்டு பேரும் லவ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. தட் ஈஸ், விஸ்வா ப்ளஸ் டூ படிச்சுட்டு இருந்தப்பவே. வனிதா அப்ப டெந்த் படிச்சுட்டு இருந்தா"

அமுதா, "வாவ். அப்படி இருந்தும் எதுக்கு ரெண்டு பேரும் சேர்ந்து டைவர்ஸ் கேட்டு இருக்காங்க?"
 

Mohan Ahuja

Active Member
1,339
266
63
ஸ்ரீவத்சன், "ரெண்டு பேரும் சேர்ந்து கேட்டாங்களான்னு எனக்கு சந்தேகமா இருக்கு. .ரொம்ப வற்புறுத்திக் கேட்டப்ப என் தங்கைகிட்டே தப்பு தன் பேரில்தான் அப்படின்னு மட்டும் வனிதா சொல்லி இருக்கா"

அமுதா, "உங்ககிட்டே விஸ்வா எதுவும் சொல்லலையா?"

ஸ்ரீவத்சன், "இல்லை"

அமுதா, "டாக்டர் ராம்கிட்டே இதைப் பத்தி கேட்டீங்களா?"

ஸ்ரீவத்சன், "நிம்ஹான்ஸ் (Nimhans - டாக்டர் ராமமூர்த்தி பணியாற்றும் புகழ்பெற்ற மருத்துவமனை) அவனை ஒரு டெபுடேஷனில் யூ.எஸ் அனுப்பி இருக்கு. இன்னும் ஒரு மூணு வாரத்தில் திரும்பி வரப் போறான். விஸ்வாகூட ஃபோனில் பேசி இருக்கான். வற்புறுத்திக் கேட்டப்ப நீ திரும்பி வா அப்பறம் சொல்லறேன்னு சொல்லியிருக்கான்."

அமுதா, "சோ, ஐ திங்க், டைவர்ஸ் வேணும்ன்னு கேட்டது உங்க சன். வனிதா அதுக்கு ஒப்புதல் கொடுத்து இருக்கா. What is your opinion?"

ஸ்ரீவத்சன், "எனக்கும் அப்படித்தான் தோணுது"

அமுதா, "உங்களுக்குத் தெரிஞ்சு அவங்களுக்கு இடையே மனஸ்தாபம் இருந்தது உண்டா?"

ஸ்ரீவத்சன், "நோ சான்ஸ். அவங்க ரெண்டு பேரும் ஒரு மாடல் கப்பிள்ன்னு சொல்லலாம். வனிதாவும் சரி விஸ்வாவும் சரி ஒருத்தருக்கு ஒருத்தர் ரொம்ப விட்டுக் கொடுப்பாங்க. இவ்வளவு வருஷத்துக்குப் பிறகும் ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் உயிருக்கு உயிரா லவ் பண்ணினாங்க. நாங்க எல்லோரும் லவ் பர்ட்ஸ்ன்னு கிண்டல் அடிக்கற அளவுக்கு. இன்னமும் லவ் பண்ணிட்டுத்தான் இருக்காங்க அப்படிங்கறது என் கணிப்பு. I think they both still are deeply in love with each other."

அமுதா, "பிறகு ஏன் இந்த டைவர்ஸ்?"

ஸ்ரீவத்சன், "ஜட்ஜ் உங்ககிட்டே கவுன்ஸிலிங்க் போகணும்ன்னு சொன்னதும் நான் ரொம்ப சந்தோஷப் பட்டேன். எப்படியாவுது இந்த டைவர்ஸை தடுத்து நிறுத்தினீங்கன்னா நான் உங்களுக்கு ஆயுசுக்கும் கடமை பட்டு இருப்பேன்"

அமுதா, "ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர்" என்று விடை பெற்றார்.
எதிரில் அமர்ந்து இருந்த இளம் தம்பதியை நட்புடன் கூடிய புன்முறுவலுடன் பார்த்து ...

அமுதா, "மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் விஸ்வநாத், மியூச்சுவல் கன்ஸெண்ட் அப்படின்னு விவாகரத்துக்கு விண்ணப்பிச்சு இருக்கீங்க. பார்த்தா மேட் ஃபார் ஈச் அதர் கபிள்ன்னு சொல்ற மாதிரி இருக்கீங்க. போதாக் குறைக்கு உங்களோட நாலே வயசான உங்க ரெட்டைக் குழந்தைங்க. அவங்களையும் ஆளுக்கு ஒருத்தரா பிரிச்சுக்க ஒத்துட்டு இருக்கீங்க. வேற ஏதோ காரணத்தை மறைச்சு அப்படி விண்ணப்பிச்சு இருப்பதா ஃபேமிலி கோர்ட் ஜட்ஜ் நம்பறார். இதை எனக்கு விளக்கி உங்களுக்கு விவாகரத்துக் கொடுக்க மனசு வரலைன்னு அவரே எனக்கு ஃபோன் பண்ணி இந்தக் கேஸை எடுத்துக்கச் சொல்லி ரிக்வஸ்ட் பண்ணினார். உங்க ரெண்டு பேரையும் நேரில் பார்த்ததுக்கு பிறகு எனக்கும் இந்த விவாகரத்து சரியில்லைன்னுதான் தோணுது. சோ, உங்களுக்கு இந்த விவாகரத்து வேணும்ன்னா எங்கிட்ட நீங்க எதையும் மறைக்கக் கூடாது. சைக்கியாட்ரி படிச்சுட்டு ரொம்ப வருஷம் ப்ராக்டீஸ் பண்ணினதுக்கு அப்பறம் தான் நான் மேரேஜ் கவுன்ஸிலர் ஆனேன். பொய் சொன்னா என்னால சுலபமா கண்டு பிடிச்சுட முடியும். Hope I made myself clear" என்று ஆணித்தரமாக முடித்தார்.

தலை குனிந்தவாறு வனிதா, "எஸ் மேம்"

முகம் இறுகிய விஸ்வா, "எஸ் மேம் லவுட் அண்ட் க்ளியர்"

அமைதி வழியும் புன் சிரிப்புடன் அமுதா, "Stated like a true army man. நீங்க இன்னமும் ஆர்மில இருக்கீங்களா?" என்று சகஜ நிலைக்குக் கொண்டு வர முயன்றார்.

விஸ்வா, "இல்லை மேம், இப்போ ஐ ஆம் எ ஸிவிலியன்"

அமுதா, "ஏன், ஆர்மில இருக்கப் பிடிக்கலையா?"

விஸ்வா, "அது ஒரு பெரிய கதை ... In fact, ஆர்மிலயே இருந்து இருந்தா இந்த சூழ்நிலையில் உங்களை சந்திச்சு இருக்க மாட்டேன்" என்று இழுத்தான்.

அமுதா, "இட்ஸ் ஓ.கே, இந்த கவுன்ஸிலிங்கில் அதை எல்லாம் எங்கிட்ட பகிர்ந்துக்க நிறைய நேரம் ஒதுக்கறேன். அப்போ சொல்லுங்க" என்ற பிறகு தொடர்ந்து "என்ன, ஆரம்பிக்கலாமா?"

விஸ்வா, "எஸ்"

வனிதா, "ம்ம்ம்"

அமுதா, "முதலில் உங்களை எப்படிக் கூப்பிடறது? உங்களை விட நான் வயசில் பெரியவதான். ஒருமையில் கூப்பிட்டா பரவால்லையா?"

விஸ்வா, "அதைத் தான் நான் விரும்புவேன்"

வனிதா, "எஸ் மேம்"

அமுதா, "நீங்களும் என்னை பேர் சொல்லித்தான் கூப்பிடணும். வேணும்ன்னா நீ வா போன்னு ஒருமையில் பேசினாலும் பரவால்லை. உங்களை மாதிரி இளம் தம்பதியர் என்னை அப்படிக் கூப்பிட்டா நானும் கொஞ்சம் இளமையா ஃபீல் பண்ணுவேன்" என்று சிலாகிக்க, அந்தத் தம்பதியரிடம் இருந்து சிறு புன்னகையே அவருக்கு பதிலாகக் கிடைத்தது.

அவர்கள் இருவரில் சோகம் அவர் மனத்தை உறுத்தியது ..

அமுதா, "மொதல்லே இந்த கவுன்ஸிலிங்க் எப்படி நடக்கப் போகுதுன்னு உங்களுக்கு விளக்கறேன். மொத்தம் பனிரெண்டு வாரங்கள் வரை இந்த கவுன்ஸிலிங்க் நீடிக்கலாம். முதலில் உங்க ரெண்டு பேர் கூட தனித்தனியா பேசுவேன். ஒரு ஸ்டேஜுக்குப் பிறகு நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து என்னை மீட் பண்ணி பேசுவீங்க. தேவை இருந்தா மறுபடியும் தனித்தனியா பேசவும் சொல்வேன். ஓ.கே?"
 

Mohan Ahuja

Active Member
1,339
266
63
கணவன் மனைவி இருவரும் தலையசைக்க டாக்டர் அமுதா தொடர்ந்தார், "சில கண்டிஷன்ஸ். உங்க ரெண்டு பேருக்கு நடுவில் எந்த வித மனஸ்தாபம் இருந்தாலும் அதை என்னுடன் தனியா பேசும் போது உங்க கோப தாபத்தை எல்லாம் கொட்டலாம். கத்தலாம். கூச்சல் போடலாம். உணற்சி வசப் பட்டு அழலாம். ஆனா உங்க ரெண்டு பேரையும் ஒண்ணா கூப்பிடும் போது மனசில் கோபமோ வருத்தமோ இருந்தாலும் அந்த வருத்தத்தை வார்த்தைகளால் மட்டும்தான் வெளிப்படுத்தணும். அப்போ கோபப் பட்டு உணற்சி வசப் பட்டு சத்தம் போடுவதை சண்டை போடுவதை அழறதை நான் அனுமதிக்க மாட்டேன். You both will behave as responsible grown up adults. சரியா?"

விஸ்வா, "சில விஷயங்களை பேசும் போது உணற்சி வசப் படுவதை தவிற்க முடியலைன்னா?"

அமுதா, "டீவில சொல்ற மாதிரி ஒரு சின்ன ப்ரேக் எடுத்துக்குவோம். உணற்சிகளை கட்டுப் படுத்தும் மன நிலை வந்த பிறகு தொடருவோம். என்ன?"

விஸ்வா, "ஓ.கே"

அமுதா, "சரி. பொதுவா முதலில் மனைவியுடன் என் கவுன்ஸிலிங்க் தொடங்கும். சோ விஸ்வா, இந்த சிட்டிங்க் வனிதாவுடன். மே பீ, அடுத்த ஒண்ணு ரெண்டு சிட்டிங்க்கும் அவகூட இருக்கலாம். நீங்க எப்ப வரணும்ன்னு என் செக்ரடரி ஃபோன் பண்ணி சொல்லுவா"

விஸ்வா முகத்தில் எரிச்சலைக் காட்டி, "How long this charade is going to go on (இன்னும் எத்தனை நாளுக்கு இந்த நாடகம் நடக்கப் போகுது?")"

அடுத்த கணம் முகத்தில் கோபம் தாண்டவம் ஆட அமுதா குரலை உயர்த்தி, "You take that back young man! நான் மொதல்ல சொன்ன மாதிரி இங்கே நான் சொன்ன படி நீ கேட்டாத்தான் இந்த கவுன்ஸிலிங்க் நடக்கும். வேண்டாம்ன்னா இப்போ இந்த நிமிஷமே ஜட்ஜுக்கு ஃபோன் பண்ணறேன். அவர் வேற யாரையாவுது ரெஃபர் பண்ணட்டும். இல்லைன்னா போதுமான அளவுக்கு அவர் கன்வின்ஸ் ஆகலைன்னு சொல்லி டைவர்ஸ் கொடுக்க முடியாதுன்னு தீர்ப்பு அளிக்கட்டும். What do you say?"

விஸ்வா, "I apologise. நாங்க ரெண்டு பேருமே விரும்பி கேட்கும்போது ஏன் இப்படி இழுத்து அடிக்கணுங்கற ஆதங்கத்தில் கேட்டேன்"

அமுதா, "விரும்பிக் கேட்டீங்களா? உங்க முகத்தை போய் கண்ணாடியில் பாருங்க. உங்க மனசில் இருக்கும் துக்கம் உங்க முகத்தில் எழுதி ஒட்டி இருக்கு. இவ முகத்தையும் பாருங்க. பலியாட்டுக் களை சொட்டுது. உங்களுக்கே தெரியும் ஏன் ஜட்ஜ் வேண்டாம்ன்னு சொன்னார்ன்னு. நீங்க ரெண்டு பேரும் எதையோ மறைக்கறது நல்லா தெரியுது. அது என்னைத் தவிற வேறு யாருக்கும் தெரிய வராதுன்னு என்னால் உங்களுக்கு உத்திரவாதம் கொடுக்க முடியும். சோ, ப்ளீஸ் கோ-ஆபரேட் வித் மீ. ஓ.கே?"

விஸ்வா, "ஓ.கே. டாக்டர். உங்க செக்ரடரி காலுக்கு நான் வெய்ட் பண்ணறேன்" என்றவாறு எழ முயன்றான்.

அமுதா, "வெய்ட். உங்களுக்கு கொஞ்சம் ஹோம் வொர்க் கொடுக்கப் போறேன்"

விஸ்வா, "என்ன?"

அமுதா, "ஆர்மில இருந்து இருக்கீங்க. டைரி எழுதும் பழக்கம் இருக்குன்னு நினைக்கறேன். Am I correct?"

விஸ்வா, "எஸ் அஃப்கோர்ஸ்"

அமுதா, "முதலில் நீங்க முதல் முதலில் வனிதாவை சந்திச்ச வருஷத்தில் இருந்து உங்க பழைய டைரிகளை புறட்டிப் பார்க்கணும். அதுக்குப் பிறகு எனக்கு ரெண்டு லிஸ்ட் தயார் பண்ணிக் கொடுக்கணும். ஒரு லிஸ்ட்டில் ஏன் நீங்க ரெண்டு பேரும் இனி சேர்ந்து வாழ முடியாதுங்கறதுக்கான காரணங்கள். இன்னொரு லிஸ்ட் ஏன் நீங்க ரெண்டு பேரும் வாழணும் அப்படிங்கறதுக்கான காரணங்கள். ஐ மீன், சேர்ந்து வாழறது, பிரியறது இது ரெண்டிலும் ப்ரோஸ் அண்ட் கான்ஸ் இருக்கும். Being a manager in a senior position and an ex-army man, நிச்சயம் இந்த ரெண்டையும் மனசில் எடை போட்ட பிறகு தான் இந்த முடிவுக்கு வந்து இருப்பீங்க. அதை உங்களை எழுதச் சொல்லறேன். அடுத்த சிட்டிங்க்குக்கு வரும்போது ரெண்டு லிஸ்டையும் எடுத்துட்டு வாங்க. ஓ.கே?"

விஸ்வா மௌனம் காக்க ...

தொடர்ந்த அமுதா, "நான் ஏற்கனவே சொன்ன மாதிரி உங்க விஷயம் எதுவும் வெளியில் யாருக்கும் நான் சொல்ல மாட்டேன். I am bound by doctor-patient cofidentiality just like any psychiatrist .. ப்ளீஸ் கோ-ஆபரேட் பண்ணு விஸ்வா"

விஸ்வா பெருமூச்செறிந்தபடி, "எஸ் மேம்" என்றபடி விடைபெற்றான்.

அவன் போவதை, அவன் அந்த அறையை விட்டு வெளியில் செல்லும் வரை, தன் உயிரே தன்னை விட்டு பிரிந்து போவதைப் பார்ப்பதைப் போல் ஏக்கம் செறிந்த கண்களுடன் வனிதா அவனை பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அவள் செய்கையை கூர்ந்து நோக்கியவாறு இருந்த அமுதா அவளது கவனம் தன் புரம் திரும்பிய பிறகு, "You love him a lot. Don't you?"

கண்கள் பனிக்க உதட்டைக் கடித்த படி மெதுவாகத் தலையசைக்கத் தொடங்கிய வனிதா பொங்கி வந்த அழுகையை அடக்க முடியாமல் கைகளில் முகத்தைப் பதித்து அழுது குலுங்கினாள்.

தன் இருக்கையை விட்டு எழுந்து அவளருகே வந்து அமர்ந்த அமுதா அவள் முதுகைத் தடவ அவரது தோளில் முகம் புதைத்து வனிதா தன் அழுகையை தொடர்ந்தாள் ...

சற்று நேரத்தில் கண்களைத் துடைத்துக் கொண்ட வனிதா, "சாரி, கொஞ்சம் இமோஷனல் ஆயிட்டேன்"

அமுதா, "நோ ப்ராப்ளம் வனிதா. இப்போ நீ என்னுடன் தனியாத்தானே இருக்கே? சரி, கண்டினியூ பண்ணலாமா?"

வனிதா, "எதுக்கு இந்த டைவர்ஸ்ன்னு ... "

அவளை மேலும் எதுவும் சொல்ல விடாமல் தடுத்த அமுதா, "அதை அப்பறம் பார்ப்போம். மொதல்ல நீ அவரை சந்திச்சதில் இருந்து நடந்ததை எல்லாம் சொல்லணும். ஒரு ஃப்ளாஷ் பாக் மாதிரி ஓ.கே?"

வனிதா, "ஓ.கே"
 

Mohan Ahuja

Active Member
1,339
266
63
விஸ்வா போவதை, அவன் அந்த அறையை விட்டு வெளியில் செல்லும் வரை, தன் உயிரே தன்னை விட்டு பிரிந்து போவதைப் பார்ப்பதைப் போல் ஏக்கம் செறிந்த கண்களுடன் வனிதா அவனை பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அவள் செய்கையை கூர்ந்து நோக்கியவாறு இருந்த அமுதா அவளது கவனம் தன் புரம் திரும்பிய பிறகு, "You love him a lot. Don't you?"

கண்கள் பனிக்க உதட்டைக் கடித்த படி மெதுவாகத் தலையசைக்கத் தொடங்கிய வனிதா பொங்கி வந்த அழுகையை அடக்க முடியாமல் கைகளில் முகத்தைப் பதித்து அழுது குலுங்கினாள்.

தன் இருக்கையை விட்டு எழுந்து அவளருகே வந்து அமர்ந்த அமுதா அவள் முதுகைத் தடவ அவரது தோளில் முகம் புதைத்து வனிதா தன் அழுகையை தொடர்ந்தாள் ...

சற்று நேரத்தில் கண்களைத் துடைத்துக் கொண்ட வனிதா, "சாரி, கொஞ்சம் இமோஷனல் ஆயிட்டேன்"

அமுதா, "நோ ப்ராப்ளம் வனிதா. நீ என்னுடன் தனிதாத்தானே இருக்கே? சரி, கண்டினியூ பண்ணலாமா?"

வனிதா, "எதுக்கு இந்த டைவர்ஸ்ன்னு ... "

அவளை மேலும் எதுவும் சொல்ல விடாமல் தடுத்த அமுதா, "அதை அப்பறம் பார்ப்போம். மொதல்ல நீ அவரை சந்திச்சதில் இருந்து நடந்ததை எல்லாம் சொல்லணும். ஒரு ஃப்ளாஷ் பாக் மாதிரி ஓ.கே?"

வனிதா, "ஓ.கே"

~~~~~~~~~~~~~~~~~

அமுதா, "விஸ்வாவை எப்போ சந்திச்சே?"

வனிதா, "சின்ன வயசில் இருக்கும் போதே. அவர் என் மாமா பையன்"

தனக்கு தெரியும் என்பதை காட்டிக் கொள்ளாமல், அமுதா, "ஓ, அரேஞ்ச்ட் மேரேஜா?"

வனிதா, "இல்லை. அரேஞ்ச்ட் லவ் மேரேஜ். அப்படி எங்க வீட்டிலோ அவர் வீட்டிலோ எதிர்த்து இருந்தா அவர்கூட ஓடிப் போகவும் தயங்கி இருக்க மாட்டேன்"

வாய்விட்டு சிரித்த அமுதா, "சோ எப்போ இருந்து அவரை காதலிக்க ஆரம்பிச்சே?"

வனிதா, "சின்ன வயசில் இருந்தே. வருஷத்துக்கு ஒரு முறை லீவில் பெங்களூர் வரும் போது அவரோடவும் அவரோட ப்ரதர் ராமோடவும் சகஜமா பேசுவேன். ராமும் ரொம்ப சகஜமா பேசுவார். இவர்தான் ரொம்ப தயங்கி தயங்கி பேசுவார். நான் எய்த் க்ரேட் படிச்சுட்டு இருந்தப்போ இவர் ஒரு டென்னிஸ் கோச்சிங்க் கேம்பில் கலந்துக்க யூ.எஸ் வந்து இருந்தார். அப்போ நல்லா பழக்கம் ஆச்சு. ஐ திங்க், அப்போதான் இவரை ரொம்ப டீப்பா லவ் பண்ண ஆரம்பிச்சேன்"

அமுதா, "Hey! Wait a minute!! நீ அப்போ யூ.எஸ்ஸில் இருந்தியா?"

வனிதா, "ம்ம்ம் .. I was born and brought up in the U.S .. அங்கே நான் நைந்த் க்ரேட் முடிச்சதுக்கு அப்பறம் இங்கே வந்தோம். டெந்த்தில் இருந்து இங்கே கண்டினியூ பண்ணினேன்"

அமுதா, "உங்க வீட்டில் நீ ஒரே குழந்தையா?"

வனிதா, "இல்லை. அண்ணா என்னை விட ஆறு வருஷம் பெரியவர். அவர் திரும்ப இங்கே வரவே இல்லை. அங்கேயே படிச்சு முடிச்சுட்டு செட்டில் ஆயிட்டார்"

அமுதா, "நீ விஸ்வாவை லவ் பண்ண ஆரம்பிச்சப்போ உனக்கு என்ன வயசு?"

வெட்கத்தில் முகம் சிவந்து தலை குனிந்த வனிதா, "I think thirteen .. "

அமுதா, "விஸ்வாவும் உன்னை அப்போ இருந்தே லவ் பண்ணினா?"

வனிதா, "I think so. ஆனா, நான் அவரை லவ் பண்ணறேன்னு தெரியறவரைக்கும் நான் அவரோட ப்ரதர் ராமை லவ் பண்ணறதா நினைச்சுட்டு இருந்தாராம்."

அமுதா, "ஏன்?"

வனிதா, "ராம் இவரை விட கொஞ்சம் ஃபேரா இருப்பார். இவர் அளவுக்கு உயரம் இல்லைன்னாலும் பார்க்க ஸ்மார்ட்டா இருப்பார். ஐ திங்க் இவரோட ஸ்கூலிலும் பொண்ணுங்க ராம்கிட்டேதான் ரொம்ப வழியுவாங்களாம்"

அமுதா, "ம்ம்ம் ... விஸ்வாகிட்டே உன் லவ்வை எப்போ சொன்னே?"

வனிதா, "நானா சொல்லலை ..."

அமுதா, "இந்த மாதிரி க்ரிப்டிக்கா பேசாம கொஞ்சம் விவரமாத்தான் சொல்லேன்? உனக்கும் பழசை நினைச்சுப் பார்க்கும் போது மனசில் இருக்கும் பாரம் கொஞ்சம் குறையும்"

வனிதா, "என்ன விவரம்?"

அமுதா, "Tell me your life history since the time you fell in love with Viswa"

வனிதா, "நான் அப்போ யூ.எஸ்ஸில் நைந்த் க்ரேட் முடிச்சுட்டு இந்தியா வந்தேன். எங்க அப்பா அவங்க வீட்டுக்குப் பக்கத்து சைட்டை ரொம்ப நாளுக்கு முன்னாடி வாங்கி அதில் வீடும் கட்டி வாடகைக்கு விட்டு இருந்தார். நாங்க வரும்போது மாமா அதை ரினவேட் பண்ணி ரெடியா வெச்சு இருந்தார். சீக்கிரமா செட்டில் ஆயிட்டோம். அப்போ அவர் ப்ளஸ் டூ அதே ஸ்கூலில் முடிச்சுட்டு ஐ.ஐ.டி என்ட்ரென்ஸ் எக்ஸாம் ரிஸல்ட்ஸுக்கு வெய்ட் பண்ணிட்டு இருந்தார். ராம் மெடிகல் காலேஜ் அட்மிஷனுக்கு வெய்ட் பண்ணிட்டு இருந்தார். எனக்கு டெந்த்க்கு இங்கே ஃப்ராங்க் ஆண்டனி ஸ்கூலில் அட்மிஷன் கிடைச்சுது. எனக்கு இங்கே இருக்கும் ஸிஸ்டம் அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியான்னு ரொம்ப பயமா இருந்தது. விஸ்வா படிக்கும் போது ஸ்கூல் ஹாக்கி டீம், அத்லெட்டிக் டீம் அப்பறம் ஸ்கூல் பாண்டிலும் இருந்து இருக்கார். சோ, விஸ்வா ஸ்கூலில் டீச்சர்ஸுக்கு மத்தியில் ரொம்ப பிரபலம். எனக்கு பயம் போகணும்ன்னு ஒவ்வொரு டீச்சருக்கும் என்னை அறிமுகப் படுத்தி என்னைப் பத்தி சொல்லி எனக்கு ஹெல்ப் பண்ண சொன்னார். நான் சேர்ந்த ஒரு மாசத்தில் ப்ரின்ஸிபல் முதலா எல்லோருக்கும் என்னை விஸ்வாவோட கஸின்னு தெரிஞ்சு இருந்தது. I was really impressed about him. முன்னத்தை விட அவரை ரொம்ப லவ் பண்ண ஆரம்பிச்சேன்"

அமுதா, "அப்போ உங்க பேரண்ட்ஸுக்கு நீ லவ் பண்ணற விஷயம் தெரியாதா?"

வனிதா, "ம்ம்ஹூம் .. முன்னே, அதாவது, யூ.எஸ்ஸில் இருந்தப்போ அம்மா ஃபோனில் மாமாகிட்டே எப்படி இருக்கான் என் மருமகன் அப்படின்னு கேட்டதை ஒட்டுக் கேட்டேன். அவங்க யாரை சொல்றாங்கன்னு எனக்கு சந்தேகமா இருந்தது. அதுக்கு அப்பறம் அப்பாகூட பேசிட்டு இருந்தப்ப ரெண்டு பேரில் யாருன்னு டிஸைட் பண்ணிட்டியான்னு அப்பா கேட்டார். அதுக்கு அம்மா, ரெண்டு பேரில் யாரா இருந்தாலும் மருமகன் தானே, இன்னும் நாள் இருக்கு எதுக்கு அவசரப் பட்டு டிஸைட் பண்ணனும் அப்படின்னு ஜோக் அடிச்சாங்க சோ, அதில் இருந்து என் லவ்வுக்கு அவங்க அப்போஸ் பண்ண மாட்டாங்கன்னு எனக்கு தெரியும். I didn't tell them anything"
 

Mohan Ahuja

Active Member
1,339
266
63
அமுதா, "சரி, நீ ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்சே. அப்பறம் என்ன ஆச்சு?"

வனிதா, "ராமுக்கு A.I.M.Sஇல் அட்மிஷன் கிடைச்சது. விஸ்வாவுக்கு ஐ.ஐ.டி அட்மிஷன் கிடைக்கலை. அவருக்கு ஐ.ஐ.டி இல்லைன்னா என்.டி.ஏ (NDA)வில் சேரணும்ன்னும் ஆசை இருந்தது. ஆனா மாமா அவரை ஐ.ஐ.டி என் ட்ரென்ஸில் அதிக கவனம் செலுத்தச் சொன்னதால் என்.டி.ஏவுக்கு சரியா பிரிபேர் பண்ணலை. ரெண்டும் கிடைக்காம ரொம்ப மனசு ஒடிஞ்சு போயிருந்தார். லோகல் காலேஜில் பணம் கொடுத்து மாமா அவருக்கு எஞ்சினியரிங்க் சீட்டுக்கு ஏற்பாடு செய்யறதா சொன்னதுக்கும் வேண்டாம்ன்னு சொல்லிட்டார். எங்க அப்பா அம்மாவுக்கு எல்லாம் ராமுக்கு எய்ம்ஸில் அட்மிஷன் கிடைச்சதில் ரொம்ப சந்தோஷம். டெல்லியில் இருந்து ராம் வாரா வாரம் அவங்க வீட்டுக்கு ஃபோன் பண்ணும்போது அம்மா அப்பாவையும் ஃபோனில் கூப்பிட்டு பேசுவார். ஒரு வாரம் அவர் கிட்டே இருந்து ஃபோன் வரலைன்னாலும் அம்மா ராம் ஏன் ஃபோன் பண்ணலைன்னு அத்தைகிட்டே கேப்பாங்க. விஸ்வா கோச்சிங்க் க்ளாஸ் போயிட்டு என்.டி.ஏ என்ட்ரன்ஸ் எக்ஸாமுக்கு பிரிபேர் பண்ணிட்டு இருந்தார். எங்க அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ராம்மைத்தான் ரொம்ப பிடிக்கும்ன்னு நான் நினைச்சேன். எங்கே அவங்க ரெண்டு பேரும் என்னைக் கேட்காம என்னை ராமுக்கு பேசி முடிச்சுடுவாங்களோன்னு எனக்கு மனசுக்குள்ளே ஒரே பயம். இப்போ நினைச்சுப் பாத்தா ரொம்ப ஸில்லியா இருக்கு. அப்போ எனக்கு பதினாறு வயசு தான். நான் படிச்சு முடிக்கும் வரை என்கிட்டே அந்தப் பேச்சை எடுக்க வேண்டாம்ன்னுதான் அவங்க இருந்து இருக்காங்க. எனக்கு அது தெரியலை. .. நான் இங்கே ஸ்கூலில் சேர்ந்து ஆறு மாசம் ஆகி இருக்கும் போது ... "

என்றும் பசுமையாக அவள் மனத்தில் நிலைத்த அன்றைய நிகழ்வுகள் அவள் மனத்தில் ஓடத் தொடங்கின ..

அவளது தாய் தந்தையர் பார்க்க வேண்டும் என்றே பள்ளியில் இருந்து வந்ததும் அவளது நோட்டுப் புத்தகங்கள் சிலவற்றை அவைகளின் கடைசிப் பக்கம் தெரியும் படி டைனிங்க் டேபிளில் பரப்பி வைத்துவிட்டு தன் அறைக்குச் சென்றாள். சிறுது நேரத்தில் அவளது தாய் வத்சலா அவளை அழைக்க ..

அவளது தாயுடன் தந்தையும் அமர்ந்து இருந்ததைக் கண்டாள்

வத்சலா, "என்ன மேடம்? படிக்கறதை மறந்துட்ட மாதிரி இருக்கு?"

வனிதா, "ஏன்? நான் படிச்சுட்டுத்தான் இருக்கேன்"

வத்சலா, "What do you call these?" என்றபடி அவள் பரப்பி வைத்து இருந்த நோட்டுப் புத்தகங்களில் ஒன்றை எடுத்துக் காட்டினாள்.

வனிதா, "ஃப்ரீயா இருந்தப்போ எழுதினது"

வத்சலா, "இதுக்கு என்ன அர்த்தம்? You are too young to think about such things"

வனிதா, "Why not?"

வத்சலா, "God! What to do with this girl Subbu? வாங்க அண்ணாகிட்டேயே போய் பேசலாம்"

அவளையும் அழைத்துக் கொண்டு அடுத்த வீட்டுக்குள் நுழைந்தனர். ஹாலில் அமர்ந்து இருந்த ஸ்ரீவத்சனிடம் வத்சலா, "அண்ணா, பாரு இவ என்ன செஞ்சு வெச்சு இருக்கான்னு" என்றபடி கையில் கொண்டு வந்து இருந்த நோட்டுப் புத்தகத்தை நீட்டினாள்.

தலையை சொறிந்த ஸ்ரீவத்சன், "ரெண்டு நாளைக்கு முன்னாடி I had a chat with my son. உங்க ரெண்டு பேர்கிட்டேயும் மெதுவா சொல்லாம்ன்னு இருந்தேன்"

சுப்ரமணியன், "என்ன ஸ்ரீ மெதுவா சொல்லாம்ன்னு இருந்தே?"

ஸ்ரீவத்சன், "இரு அவனையே கூப்பிடறேன்" என்ற போது அவரது மனைவி காயத்ரி உள்ளிருந்து வந்தாள்.

காயத்ரி, "ஹே, என்ன புருஷன் பெண்டாட்டி ரெண்டு பேரும் பொண்ணையும் கூட்டிட்டு வந்து இருக்கீங்க? நாங்க இல்லை இன்னைக்கு உங்க வீட்டுக்கு டின்னருக்கு வர்றதா இருந்தோம்?"

வத்சலா, "இது வேற விஷயம் காயத்ரி. பாரு" என்ற படி கையில் இருந்த மற்ற ஒரு நோட்டுப் புத்தகத்தை அவளிடம் நீட்டினாள். வாங்கிப் பார்த்த காயத்ரியின் முகத்தில் புன் முறுவல் பரவத் தொடங்கியது.

ஸ்ரீவத்சன் தன் மனைவியிடம், "அவனை கூப்பிடு"

காயத்ரி, "இங்கே பாருங்க அவனே மனசு ஒடிஞ்சு போயிருக்கான். ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் டீடெயிலா பேசினோம். அவனும் சரின்னு ஒத்துட்டான். இப்போ எதுக்கு அவனை இழுக்கறீங்க?"

ஸ்ரீவத்சன், "ரெண்டு பேர் படிப்பும் கெட்டுப் போகக் கூடாது. அவன் அதுக்கு பொறுப்பு ஏத்துக்கணும். Call him"

சிறிது நேரத்தில் விஸ்வா அங்கு வந்தான்.

ஸ்ரீவத்சன், "உன் பர்ஸை அத்தைகிட்டே கொடு"

விஸ்வா முகத்தில் பீதி பரவ, "நோ! டாட், நேத்துதானே நான் உங்ககிட்டே ப்ராமிஸ் பண்ணினேன்? இப்போ எதுக்கு டாட்?"

ஸ்ரீவத்சன், "முதல்ல உன் பர்ஸில் இருப்பதை அத்தை மாமாகிட்டே காட்டு"

கண் கலங்கிய விஸ்வா, "டாட், I know they all, including her, prefer Ram over me. எதுக்கு டாட் என்னை எம்பாரஸ் பண்ணறீங்க?"

வத்சலா, "இது என்ன புதுக் கதை? அண்ணா அவனை எதுக்கு இப்படி எம்பாரஸ் பண்ணறே? பரவால்லடா கண்ணா நீ ஒண்ணும் உன் பர்ஸ்ஸை காட்ட வேண்டாம். பட், ஒண்ணு சொல்லறேன். Never did any of us preferred Ram over you" என்ற பிறகு வனிதாவைக் காட்டி சிரித்தபடி, "Particularly not her"

ஸ்ரீவத்சன், "டேய். உன்னை எம்பாரஸ் பண்ணறதுக்காக சொல்லலை. Its time they too know about it அதுக்ககத்தான் சொன்னேன். கொடு"

தயக்கத்துடன் விஸ்வா தன் பர்ஸ்ஸை திறந்து காட்ட அதில் வனிதாவின் புகைப் படம் ஒன்று இருந்தது

ஸ்ரீவத்சன், "சார்கிட்டே இந்த மாதிரி ஒரு டஜன் ஃபோட்டோஸ் இருக்கு. ஒவ்வொண்ணு பின்னாலையும் 'வனிதா மை லவ்' அப்படின்னு எழுதி வெச்சு இருக்கார். ரெண்டு நாளைக்கு முன்னாடி எதேட்சையா அவன் ரூமுக்குப் போனப்ப பார்த்தேன். நாங்க ரெண்டு பேரும் அவனுக்கு அட்வைஸ் பண்ணினோம்"

வனிதாவின் முகம் ஆயிரம் வாட்ஸ் விளக்கைப் போல பிரகாசிக்க விஸ்வாவின் முகத்தில் இருந்த குழப்பம் அகலவில்லை.

காயத்ரி, "நீ இன்னும் அவளுக்கு சொல்லலைன்னு சொன்னே இல்லை? See what she has been doing in her class" என்ற படி அந்த நோட்டுப் புத்தகத்தை அவனிடம் நீட்டி கடைசிப் பக்கத்தைக் காட்டினாள்

அதில் அந்தப் பக்கம் முழுவதும் 'வனிதா விஸ்வநாத்' என்று பல விதங்களில் எழுதப் பட்டு இருந்தது. சில இடங்களில் அதையே கையொப்பம் போலும் இடப் பட்டு இருந்தது.

வனிதாவின் முகத்தில் இருந்த பிரகாசம் அவனது முகத்துக்கும் பரவியது.
 

Mohan Ahuja

Active Member
1,339
266
63
ஏதும் பேசாமல் நின்று இருந்த அந்த பச்சிளம் ஜோடியைப் பார்த்து ஸ்ரீவத்சன், "Look both of you. We are not against your love for each other. ரெண்டு பேரும் டீன் ஏஜர்ஸ். நீங்க ரெண்டு பேரும் வாழ்க்கையில் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு. செய்ய வேண்டிய வேலைகளை விட்டுட்டு இப்படி கனவு கண்டுட்டு இருந்தா உங்க படிப்பு கெடும். விஸ்வா, அடுத்த வருஷம் என்.டி.ஏ சேரணும்ன்னு குறியா இருக்கே. வனிதா நீ இந்த வருஷம் ஐ.ஸி.எஸ்.ஸி போர்ட் எக்ஸாம் எழுதப் போறே. நீங்க ரெண்டு பேரும் நல்லா பிரிபேர் பண்ணனும். என்ன?"

வனிதா, "மாமா, என் படிப்பு கெடாது. நான் நல்லா படிப்பேன்"

விஸ்வா, "டாட், நிச்சயம் நான் அடுத்த வருஷம் என்.டி.ஏவில் சேரத்தான் போறேன். பாத்துட்டு இருங்க"

வத்சலா, "விஸ்வா, இவளுக்கு இது புது இடம் புது ஸ்கூலிங்க் ஸிஸ்டம். நீதான் அவளுக்கு ஹெல்ப் பண்ணி கோப்-அப் பண்ண வைக்கணும். இவ எங்கேயும் போயிட மாட்டா. நீ படிச்சு ஒரு நல்ல பொசிஷனுக்கு வந்ததும் நாங்களே உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் செஞ்சு வெக்கறோம். அது வரைக்கும் நீங்க ரெண்டு பேரும் ரொம்ப கவனமா இருக்கணும். ரெண்டு பேரும் அவங்கவுங்க வேலைகளை முடிச்சுட்டு, ஜாலியா வெளியே மூவிக்கு, டின்னருக்கு எல்லாம் போகணும்ன்னா I have no problem allowing you both to do the same" என்றவளை இடைமறித்து ..

ஸ்ரீவத்சன், "என்ன வத்சலா இது?"

வத்சலா, "அண்ணா, உன் பையன் வேணுன்னா நீ சொன்னபடி கேட்டு இருப்பான். இவ அங்கே பிறந்து வளந்தவ. சின்ன வயசிலேயே நிறைய விஷயங்கள் அவளுக்குத் தெரியும்" என்றபடி வனிதாவைக் கூர்ந்து நோக்கினாள். தாய், மகள் இருவர் பார்வையும் ஒரு கணம் உறைந்து நின்றபின் வனிதா தலை குனிந்தாள்.

பெருமூச்சு விட்டபடி வத்சலா தொடர்ந்தாள், "ஸ்கூலிலேயே சொல்லிக் கொடுத்து இருக்காங்க. இவ மட்டும் தான் அவ க்ளாஸ்ல டேட்டிங்க் எதுவும் போகாம இருந்தா. அவளா கேட்டு இருந்தா நிச்சயம் அனுமதிச்சு இருப்போம். நாம் தடுத்தா ரெண்டு பேரும் திருட்டுத்தனமா மீட் பண்ணிப்பாங்க."

விஸ்வா, "No aththai. I won't if you both and my parents don't permit (இல்லை அத்தை நீங்களும் மாமாவும் எங்க அப்பா அம்மாவும் அனுமதிக்கலைன்னா நான் செய்ய மாட்டேன்)"

வனிதா, "But what's wrong (அதனால என்ன?)" என்ற அவளது சிறு பிள்ளைத் தனமான ஈன ஸ்வரத்திற்கு

விஸ்வா, "You keep quite" என்று முற்றுப் புள்ளி வைத்தான்.

தன் வருங்கால மருமகனை வாஞ்சையுடன் பார்த்த வத்சலா தன் அண்ணனிடன், "பாத்தியா, இவனே வேண்டான்னாலும் என் பொண்ணு அவனை ஒரு வழி பண்ணிடுவா. So, let us not be too contrite about it (நாம ரொம்ப கட்டுப்பெட்டியா இருக்க வேண்டாம்)" என்றபிறகு வனிதாவைப் பார்த்து "உனக்கு டியூஷன் இருக்கு இல்லை. கிளம்பு" என்றபிறகு தன் அண்ணனிடம் குறும்புப் பார்வையுடன், "அண்ணா, ரொம்ப லேட் ஆயிடுச்சு. Hope Viswa wouldn't mind dropping her in his new sexy bike? (விஸ்வாவுக்கு அவளை அவனோட புது பைக்கில் கூட்டிட்டு போக ஆட்சேபனை எதுவும் இருக்காது இல்லை?)"


முகம் மலர்ந்த விஸ்வாவைப் பார்த்துப் பூரித்த காயத்ரி, "No issues. My sons will always be at the service of a damsel in distress"

விஸ்வா, "I beg to differ மா! Unlike Ram I am partial to only MY damsel" என்றபடி அவன் அப்படிச் சொன்னதில் முகம் பிரகாசித்த வனிதாவை அழைத்துக் கொண்டு வெளியில் சென்றான்.

விஸ்வா பைக்கை இயக்க அவன் பின்னால் அமர்ந்த வனிதா அவனை அணைத்து அவன் முதுகில் தலை சாய்த்ததை பார்த்த தாய்மார் இருவருக்கும் கண்கள் பனித்தன.

முகத்தில் ஆதங்கம் ததும்ப ஸ்ரீவத்சன், "வத்சலா, இன்னும் நாலஞ்சு வருஷம் இருக்கு. He will be out most of that time"

காயத்ரி, "நீ ஒண்ணும் கவலைப் படாதே வத்சலா. அவனைப் பத்தி அவங்க அப்பாவைவிட எனக்கு நல்லா தெரியும். எங்கே போனாலும் திரும்பி பெட்டிப் பாம்பா வந்துடுவான். உன் பொண்ணை நீ ஒழுங்கா பாத்துக்கோ"

சுப்ரமணியன், "ஃப்யூ!" என்று பெருமூச்சு விட்டபின், "ஸ்ரீ, அந்த சிங்கிள் மால்ட்டை ஓபன் பண்ணலாம் வா"

இக்கதையை கேட்டதும் அமுதா வாய்விட்டுச் சிரித்தார் அதே சமயம் தனக்கு வேண்டியதை அடைவதில் வனிதா சிறிதும் தயக்கம் காட்ட மாட்டாள் என்பதை உணர்ந்தார், "வாவ், இப்போ கூட இங்கே எல்லாம் பேரண்ட்ஸ் அப்படி அனுமதிக்கறது இல்லை. So did you both kept your promises?"

வனிதா, "Yes very much. என்னைவிட விஸ்வாதான் ரொம்ப சீரியஸ்ஸா கடைபிடிச்சார். ஒரு காரியத்தில் இறங்கினா எந்த அளவுக்கு அவரால ஃபோகஸ்ட்டா இருக்க முடியும்ன்னு அப்போத்தான் தெரிஞ்சுட்டேன்.. இன்னமும் அவர் அப்படித்தான்"


அமுதா, "சோ, தனக்கு ஒரு வேலைன்னா உன்னை அம்போன்னு விட்டுட்டு போயிடுவானாக்கும்?"

வனிதா, "No way! அவர் என்ன காரியத்தில் ஈடுபட்டு இருந்தாலும் ஒரு கண் என் மேல் இருந்துட்டே இருக்கும்"

அமுதா, "உதாரணத்துக்கு ஒரு இன்ஸிடெண்ட் சொல்லேன்"

வனிதா, "நான் வாரத்தில் மூணு நாள் ஈவ்னிங்க் டியூஷன் போவேன். விஸ்வா எர்லி மார்ங்கிங்க் ரன்னிங்க் அப்பறம் ஜிம்முக்குப் போவார். அதுக்கு பிறகு நான் ஸ்கூலுக்குப் போகும் போது அவரும் கோச்சிங்க் க்ளாஸ் போவார். விஸ்வா டெய்லி ஈவ்னிங்கில் ஸ்விம்மிங்க் ப்ராக்டீஸ் பண்ணுவார். நான் டியூஷன் போகாத நாளில் நான் அவரோடு கொஞ்ச நேரமாவுது ஸ்பெண்ட் பண்ணுவேன். முதலில் அம்மா அப்பா, மாமா அத்தை எல்லாம் அப்ஜெக்ட் பண்ணினாங்க. அப்பறம் அம்மாவே இந்த வருஷக் கடைசியில் இருந்து எப்படியும் பிரிஞ்சுதான் இருக்கப் போறாங்க பரவால்லை விடுண்ணான்னு மாமாகிட்டே சொல்லிட்டாங்க. அவர் ஸ்விம்மிங்க் போகும் போது கூட போய் பூல் சைடில் உக்காந்து படிச்சுட்டு இருப்பேன். ஒரு மணி நேரத்தில் ஐம்பது லாப்ஸ் ஸ்விம் பண்ணுவார். இருட்டின நேரமா இருக்கும். ஆனா என்கிட்டே யாராவுது வந்தாலோ பேச்சுக் கொடுத்தாலோ உடனே நிறுத்திட்டு என்னைப் பார்ப்பார். நான் ஓ.கேன்னு சொன்னதுக்கு அப்பறம்தான் கண்டின்யூ பண்ணுவார்"
 

Mohan Ahuja

Active Member
1,339
266
63
அமுதா, "ஓ, எங்கே ஸ்விம் பண்ணுவான்? நம்ம க்ளப்பிலேயா. நான் அவனைப் பார்த்ததே இல்லையே"

வனிதா, "பெங்களூர் க்ளப்பில் இல்லை. இந்திரா நகர் க்ளப் ஸ்விம்மிங்க் பூலில். பாங்களூர் க்ளப்புக்கு போயிட்டு வர லேட் ஆகும்ன்னு இங்கே போவார்"

அமுதா, "Oh! His parents were members of both the clubs is it? (ஓ, அவனோட அப்பா ரெண்டு க்ளப்பிலும் மெம்பரா?)"

வனிதா, "Yes. Now we are also .. I mean he is also a member of both (ம்ம்ம் .. நாங்களும் .. ம்ம்ம்ம் அவரும் ரெண்டு க்ளப்பிலும் மெம்பர்)"

அமுதா, "முதலில் நாங்கன்னு சொல்லிட்டு அப்பறம் ஏன் அவன் மட்டும் மெம்பர்ன்னு சொன்னே?"

வனிதா, "நான் அதில் அவரோட மனைவிங்கறதால டிபெண்டண்ட் மெம்பர்" என்ற பிறகு தொண்டை அடைக்க, "டைவர்ஸுக்கு அப்பறம் எனக்கு மெம்பர்ஷில் இருக்காது"

அமுதா, "அந்தப் பேச்சை எடுக்க வேண்டாம்ன்னு சொன்னேன். மறந்துடுச்சா? ஸ்டில், உன் கூட இருக்கப் போற உன் பையன் டிபெண்டெண்ட் மெம்பரா கண்டின்யூ பண்ணுவான் இல்லையா?"

வனிதா அமுதாவை வெறித்துப் பார்த்தாள். ஆழ்மனதில் அவள் எதையோ மறைப்பதை அமுதா உணர்ந்தாள்.

அமுதா, "இட் இஸ் ஓ.கே. லவ் ஸ்டோரியை கண்டின்யூ பண்ணலாம். சோ, அந்த வருஷம் முழுக்க ஃப்ரீ டைமில் எல்லாம் ஒண்ணா சுத்தினீங்களாக்கும்?"

வனிதா, "ம்ம்ம் .. "

அமுதா, "உங்க அம்மா சொன்ன மாதிரி லிமிட்டை க்ராஸ் பண்ணாம நடந்துட்டீங்களா?"

வெட்கத்தில் முகம் சிவந்த வனிதா, "அதிக பட்சம் கிஸ் பண்ணிப்போம். அதுவும் அந்த வருஷம் முடியற சமயத்தில். பிரிஞ்சு இருக்கப் போறோமேன்னு எனக்கு ரொம்ப கவலையா இருக்கும். அழுவேன். என்னை கன்ஸோல் பண்ண கட்டிப் பிடிப்பார். அப்போ ஆரம்பிச்சுது"

அமுதா பேச்சின் தடத்தை மாற்றும் வகையில் திடீரென, "Were you a virgin then? (உனக்கு அதற்கு முன் செக்ஸில் அனுபவம் இருந்ததா என்பதை பூடகமாக நீ அப்பொழுது கன்னித்தன்மையுடன் இருந்தாயா) என்று கேட்டார் ... (பாருங்க இங்கிலீஷில் எழுதறது எவ்வளவு சுலபம்ன்னு!)"

முகத்தில் கோபம் தாண்டவமாட வனிதா, "Of course! I gave my virginity to Viswa during our first night (என் கன்னித்தன்மையை விஸ்வாவுக்கு எங்களது முதலிரவில் சமர்ப்பித்தேன்)"

அமுதா, "இல்லை, உங்க அம்மா மாமாகிட்டே பேசும் போது உனக்கு நிறைய எக்ஸ்போஷர் இருக்குன்னு சொன்னாங்கன்னு நீ சொன்னியே? அதான் கேட்டேன்"

வனிதா பதில் சொல்ல சற்று தடுமாறிய பிறகு, "அது ... என் ஃப்ரெண்ட்ஸ் நிறையப் பேருக்கு இதில் எக்ஸ்பீரியன்ஸ் இருந்தது. நானே நேரில், ஐ மீன் ஒளிஞ்சு இருந்து பார்த்து இருக்கேன். அப்பறம் அம்மா எனக்கு அட்வைஸ் பண்ணினாங்க"

சில பொத்தல்களை அவள் சங்கோஜத்தில் மறைப்பதை அமுதா உணர்ந்தாள்.

அமுதா, "சோ, அந்த வருஷக் கடைசியில் விஸ்வா என்.டி.ஏ ஜாயின் பண்ணினானா?"

வனிதா, "எஸ். He was one of the top rank holders"

அமுதா, "அப்பறம் எப்படி உங்க காதல் தொடர்ந்தது?"

வனிதா, "வாரா வாரம் ஃபோன் கால். வருஷத்துக்கு ஒரு முறை பத்தே நாள் லீவில் வருவார்"

அமுதா, "நீ என்ன செஞ்சுட்டு இருந்தே?"

வனிதா, "நான் முதலில் பி.ஏ எகனாமிக்ஸ் படிச்சுட்டு அதுக்கு அப்பறம் மேனேஜ்மென்ட் படிக்கணும்ன்னு இருந்தேன். அப்பா மாமா ரெண்டு பேரும் பி.ஏ பண்ணறதுக்கு பதிலா பி.காம் படிக்க சொன்னாங்க. சரின்னு செயின்ட் ஜோஸப்ஸ்ஸில் பி.காம் ஜாயின் பண்ணினேன்"

அமுதா, "ப்ளஸ் டூ எங்கே படிச்சே?"

வனிதா, "ப்ளஸ் டூ முடிக்கும் வரைக்கும் ஃப்ராங்க் ஆண்டனிலேயே கண்டின்யூ பண்ணினேன்"

அமுதா, "சோ, அப்பறம் என்ன ஆச்சு?"

வனிதா, "பி.காம் ஜாயின் பண்ணும் வரை எனக்கு அவ்வளவா காமர்ஸில் இன்டரெஸ்ட் இருக்கலை. ஒன்ஸ் படிக்க ஆரம்பிச்ச பிறகு எனக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு. I was my class topper throughout"

அவள் முகத்தில் இருந்த பெருமிதம் அவளது சோகத்தையும் சிறுது மறைத்தது ...

வனிதா, "நான் செகண்ட் இயர் ஸ்டார்ட் பண்ணும் போது விஸ்வா என்.டி.ஏ முடிச்சுட்டு டெஹராடூனில் இருக்கும் ஐ.எம்.ஏவுக்குப் போனார்"

அமுதா, "ஸோ, விஸ்வா ஆர்மில செலக்ட் ஆனானா? ஏன் அவனுக்கு ஏர் ஃபோர்ஸ், நேவில எல்லாம் இஷ்டம் இல்லையா?"

வனிதா, "ம்ம்ஹூம் .. He always wanted to be an army man. என்.டி.ஏ பாஸ்ஸிங்க் அவுட் பரேடுக்கு (NDA Passing Out Parade) நாங்க எல்லாம் போயிருந்தோம். ராமும் டெல்லியில் இருந்து வந்து இருந்தார்"

அமுதா, "எந்த ரெஜிமெண்டில் சேர்ந்தான்?"

வனிதா, "என்.டி.ஏவில் இருக்கும் போதும் அவர் ரொம்ப நல்லா படிச்சார். அவருக்கு எப்பவும் எஞ்சினியரிங்கில் இன்டரெஸ்ட் உண்டு. சோ, என்.டி.ஏவிலும் நிறைய எஞ்சினியரிங்க் சப்ஜெக்ட்ஸ் ஆப்ட் பண்ணி படிச்சார். முடிக்கும் போது மெட்ராஸ் ஸாப்பர்ஸ்ஸில் (Madras Sappers) செலக்ட் ஆனார். He was a combat engineer"

ராணுவ பொறியியல் குழு (Military Engineering Group) என்பது ராணுவத்தை சார்ந்த ஒரு படை. மெட்ராஸ் ஸாப்பர்ஸ் (Madras Sappers), பாம்பே ஸாப்பர்ஸ் (Bombay Sappers) மற்றும் பெங்கால் ஸாப்பர்ஸ் (Bengal Sappers) என்ற மூன்று பிரிவுகளும் இதில் அடக்கம். போரில் டேங்குகள் (battle tank) துருப்புக்கள் செல்வதற்கு முன்னால் அவை செல்லுவதற்கு ஏதுவான பாதை அமைத்துக் கொடுப்பதில் இருந்து (வேண்டுமானால் துரிதமாக டேங்குகள் செல்லும் அளவுக்கு பலமுள்ள பாலங்கள் அமைப்பது முதல்) ராணுவத்தில் இருக்கும் இயந்திரங்களை சரி பார்ப்பது வரை இப்படையில் வேலை. பல பொறியாளர்களுடன் போர்ப் பயிற்சி பெற்ற ஆஃபீஸர்களும் இதில் இருப்பார்கள். பல போர்களில் முன் செல்லும் கமாண்டொ மற்றும் பாரா ரெஜிமென்ட் (Para Regiment) வீரர்களுடன் சேர்ந்து படை செல்ல திட்ட மிட்ட பாதைகளின் பாதுகாப்பை வேவு பார்ப்பதும் இவர்களின் வேலையே. தங்களுக்குக் கீழ் பணி புரியும் பொறியாளர்களின் பாதுகாப்பும் விஸ்வாவைப் போன்ற ஆஃபீஸர்களின் கையில்.
 

Mohan Ahuja

Active Member
1,339
266
63
அமுதா, "வாவ், காம்பாட் எஞ்சினியர்ன்னா சண்டையில் கலந்துக்குவாங்களா?"

வனிதா, "More of defense .. அவங்களுக்கு கீழே இருக்கறவங்க இவங்க பொறுப்பில் இருப்பாங்க"

அமுதா, "உனக்குத் தெரியுமான்னு தெரியலை, நானும் ஒரு எஞ்சினியர்கூட இருவது வருஷத்துக்கும் மேல குடும்பம் நடத்திட்டு இருக்கேன். மத்தபடி விஸ்வா எப்படி? அவனும் ஒரு டிபிகல் எஞ்சினியர் மாதிரிதானா?" என்ற அர்த்தம் பொருந்திய கேள்வியை புன்னகைத்த படி கேட்க,

சிரித்த வனிதா, "Yes. A very thorough one at that (அவர் ரொம்பவே எஞ்சினியர்தான்)"

சிரித்த படி அமுதா, "Now we are on common territory .. (இப்போத்தான் நாம ரெண்டு பேரும் பொதுவான் விஷயம் பேசறோம்)". சரி, என் அனுபவம் இருக்கட்டும். உனக்கு எப்படி?"

வனிதா, "வீட்டில் இருக்கும் எல்லாம் சரியா வொர்க் பண்ணனும். ப்ளெண்டரில், ஐ மீன் மிக்ஸியில் கொஞ்சம் வேற மாதிரி சவுண்ட் வந்தாலும் உடனே என்னன்னு பார்த்து எதாவுது செய்வார். எங்க வீட்டில் எதுவும் ரிப்பேர் ஆகி நின்னு போனது கிடையாது. அதே மாதிரி கேட் கதவு எதிலும் திறந்து மூடும் போது எந்த சத்தமும் வராம ஸ்மூத்தா வொர்க் பண்ணனும். எங்க வீட்டுக் கதவில் லாக்கை திறக்கும் போது கூட ரொம்ப சத்தம் கேட்காது .." என்றவள் அதைச் சொல்லச் சொல்ல அவள் கண்கள் குளமாகின

அமுதா, "ஏன் இதுக்கு இமோஷனல் ஆயிட்டே?" என்று மெதுவாக தன் கேள்விகளை விவாகரத்தின் முக்கியக் காரணங்களின் பக்கம் செலுத்தினார்.

சுதாரித்துக் கொண்ட வனிதா, "இல்லை. நான் கிச்சனில் இருக்கும் போது அவர் வீட்டுக் கதவை திறந்து உள்ளே எனக்குப் பக்கத்தில் வரும் வரை ஒரு சத்தமும் இருக்காது .. அதை நினைச்சுட்டேன்"

அமுதா, "சோ, மெட்ராஸ் ஸாப்பர்ஸ்ன்னா எங்கே போஸ்டிங்க் இருந்தது?"

வனிதா, "முதலில் இங்கே, பெங்களூரில்தான் இருந்தது. அப்போ நான் பி.காம் ஃபைனல் இயர். அடுத்த ஏழு மாசமும் ரொம்ப ரொம்ப ஜாலியா இருந்தோம். நான் நல்லா படிச்சுட்டு இருந்தேன். ஸ்டில் எனக்கு ஃப்ரீ டைம் நிறைய இருக்கும். ஆனா அம்மா கொஞ்சம் ஸ்ட்ரிக்டா இருந்தாங்க. ராமும் அப்போதான் நிம்ஹான்ஸ்ஸில் ஜாயின் பண்ணினார்"

அமுதா, "ஓ, டாக்டர் ராம் M.B.B.S முடிச்சதும் Nimhansஇல் ஜாயின் பண்ணினாரா?"

வனிதா, "ஆமா. ஒரு வருஷத்துக்கு அப்பறம்தான் மேல் படிப்புக்கு லண்டன் போனார்" என்றபின் சற்று நேர மௌனத்திற்குப் பிறகு தொடர்ந்து, "ரெண்டு பேரும் ட்வின்ஸ் நீங்க அவருக்கு மட்டும் தனி மரியாதை கொடுக்க வேண்டியது இல்லை" என்று தன் கணவனை ஒருமையிலும் அவனது இரட்டைப் பிறவியை பன்மையிலும் அழைத்ததில் தான் அடைந்த எரிச்சலைக் காட்டினாள்.

அமுதா, "மை காட்! புருஷனை கொஞ்சமும் விட்டுக் கொடுக்க மாட்டே போல இருக்கே. சாரி, டாக்டர் ராமை எனக்கு முன்னாடியே தெரியும். நேரடியா நீங்க வாங்கன்னுதான் கூப்பிட்டுப் பழக்கம். இனி உன் கூட பேசும் போது அவன் இவன்னே சொல்றேன். ஓ.கே?"

வனிதாவின் உதடுகளில் தோன்றிய புன்னகை அமுதாவுக்கு தன் இலக்கை எளிதில் அடைய முடியும் என்ற நம்பிக்கை ஊட்டியது ..

அமுதா, "சரி, உங்க அம்மா ஸ்ட்ரிக்டா இருந்தாங்க. அப்பறம்?"

வனிதா, "அத்தையும் ராமும்தான் எங்களுக்கு ரொம்ப சப்போர்டிவா இருப்பாங்க. எங்க அத்தை ஒரு சார்டட் அக்கௌண்டண்ட். ஒரு பெரிய ஆடிட்டர் நிறுவனத்தில் பார்ட்னர். டவுட் கேட்க அத்தைகிட்டே போறேன்னு சொல்லிட்டு அங்கே போவேன். அங்கே இருந்து ராம் என்னை விஸ்வா இருக்கும் இடத்துக்குக் கூட்டிட்டுப் போவார்"

அமுதா, "எப்படி?"

வனிதா, "காருக்குள்ளே ஒளிஞ்சுக்குவேன்" சொன்ன மறுகணம் அவள் விரக்தியுடன், "வெளியில் இருக்கறவங்களுக்கு தெரியாம காரில் ஒளிஞ்சுக்கறது அப்போத்தான் எனக்குப் பழக்கம் ஆச்சு"

அமுதா, "ஏன் அதைப் பத்தி ரொம்ப டிஜக்டடா சொல்லறே?"

வனிதா, "ஒண்ணுமில்லை" என்று சுதாரித்துக் கொண்டு தொடர்ந்தாள், "ராம் எம்.ஈ.ஜி வாசலில் கொண்டு போய் விடுவார். காரை எடுத்துட்டு நானும் விஸ்வாவும் எங்கேயாவுது போவோம். முக்கால் வாசி நேரம் பக்கத்தில் அல்சூர் ஏறிக் கரையில் இருக்கும் பார்க்கில் ஒரு மூலையில் போய் உக்காந்துட்டு மணிக்கணக்கா பேசிட்டு இருப்போம். ராம் இவரோட பைக்கை எடுத்துட்டு எங்கேயாவுது சுத்திட்டு வருவார். மறுபடி வெஹிகிள் சேஞ்ச் பண்ணிட்டு வீட்டுக்கு வருவோம். வீட்டுக்கு வந்து விஸ்வா முதல்ல எங்க வீட்டில் போய் அரட்டை அடிச்சுட்டு இருப்பார். நான் அவங்க வீட்டில் இருந்து வர மாதிரி புக்ஸை எடுத்துட்டு வருவேன்"

அமுதா, "ஏய், அல்சூர் ஏறி பக்கத்தில் இருக்கும் பார்க்கா? அது இருட்டினதுக்கு அப்பறம் கொஞ்சம் பாதுகாப்பு இல்லாத பகுதி அப்படிம்பாங்களே?"

வனிதா, "இவர் யூனிஃபார்மில் இருப்பார். பாக்கறவங்க இவரைப் பாத்து பயந்து ஒதுங்கிப் போவாங்க"

அமுதா, "ரொம்ப ஜாலியா ரோமான்ஸ் பண்ணிட்டு இருந்து இருக்கீங்க. Then what happened?"

வனிதா, "ஆறு மாசம் கழிச்சு கார்கில் வார் தொடங்குச்சு. இவரை வார் ஃப்ரண்டுக்கு ஷிஃப்ட் பண்ணினாங்க"

ஒரு கணம் போர் என்றதும் சற்று அதிர்ச்சியுற்றாலும் மறுகணம் விஸ்வா வெற்றிகரமாக திரும்பி வந்து இருக்கிறான் என்று உணர்ந்த அமுதா, "வாவ், விஸ்வா ஒரு வார் ஹீரோவா?"

வனிதா, "ம்ம்ம் .. "

அமுதா, "God! That must have been a really traumatic experience to you (ஐய்யோ! நினைச்சுப் பாக்கவே கஷ்டமா இருக்கு. உனக்கு ரொம்ப பயப்பட்டு இருந்து இருப்பே இல்லை?)"

வனிதா, "பாதி நாள் நான் தூங்கவே இல்லை .. "

அமுதா, "படிச்சுட்டு இருக்கும் போதா?"

வனிதா, "இல்லை .. நான் பி.காம் ஃபைனல் இயர் எக்ஸாம் சமயம்"

அமுதா, "ஓ! ரோமான்ஸ் பண்ணிட்டு இருந்தப்ப பாதியில் போயிட்டானா? எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இருந்தீங்க?"

வனிதா, "ம்ம்ம் ... கல்யாணத்தைப் பத்தி எங்க ரெண்டு பேர் பேரண்ட்ஸ்ஸும் பேச்சு எடுத்தாங்க. விஸ்வாவும் நானும் இன்னும் ரெண்டு மூணு வருஷம் கழிச்சு செஞ்சுக்கலாம்ன்னு முடிவெடுத்து இருந்தோம்"
 

Mohan Ahuja

Active Member
1,339
266
63
அமுதா, "ஏன்?"

வனிதா, "I was hardly 21. இன்னும் கொஞ்சம் நாள் ஜாலியா இருக்கலாம்ன்னு. Besides, நான் முதலில் ஃபுல் டைம் எம்.பி.ஏ பண்ணனும்ன்னு இருந்தேன். ஆனா வொர்க் பண்ணிட்டே பார்ட் டைம் பண்ணலாம்ன்னு பேரண்ட்ஸ் சஜ்ஜஸ்ட் பண்ணினதால பி.காம் முடிச்சுட்டு ஒரு வேலையில் சேர்ந்ததுட்டு எம்.பி.ஏ என்ரோல் பண்ணனும்ன்னு இருந்தேன். எம்.பி.ஏ முடிச்சுட்டு கல்யாணம் பண்ணிக்கறேன்னு விஸ்வாகிட்டே சொன்னேன். அவரும் ஒத்துட்டார். எக்ஸாம் எழுதி முடிச்சதும் அக்கௌண்ட்ஸ் அஸிஸ்டண்ட் வேலையில் சேர அத்தை அரேஞ்ச் பண்ணி இருந்தாங்க்"

அமுதா, "எங்கே வேலையில் ஜாயின் பண்ணினே?"

வனிதா, "Precision Measurements Limited"

அமுதா, "You mean, மிஸ்டர் ஷண்முகத்தோட கம்பெனியா? ரீஸண்டா அந்தக் கம்பெனியை மேனேஜிங்க் டைரக்டர், அவர் மருமகன் சந்திரசேகர் ஆக்ஸிடெண்டில் செத்துப் போனாரே?"

வனிதா, "ஆமா .. " என்ற அவள் கண்களில் இருந்த விரக்தியில் ஒரு முதலாளியின் இறப்பினால் வரும் அளவுக்கும் அதிகமான சோகம் தென்பட்டது.

அமுதா, "ரொம்ப பரிதாபம் இல்லை? க்ளப்பில் நிறைய தரம் மீட் பண்ணி இருக்கோம் அவர் அப்படி குடிச்சுட்டு கார் ஓட்டிட்டுப் போவார்ன்னு என்னால நம்பமுடியலை."

வனிதா தலை குனிந்து மௌனம் காக்க ..

அமுதா, "ட்ரைவரை அனுப்பிட்டு அவர் எதுக்கு ஓட்டிட்டுப் போனார்? என் ஹப்பி அது நிஜமாவே ஆக்ஸிடெண்டான்னு சந்தேகப் பட்டார். உனக்கு அதைப் பத்தி எதாவுது தெரியுமா?"

வனிதா அவசரமாக, "எனக்கு ஒண்ணும் தெரியாது". அவள் குரலில் சிறு பதட்டமும் தெரிந்தது.

அமுதா, "பாவம். சரி அதை விடு. நம்ம கண்டின்யூ பண்ணலாம். எப்போ வேலையில் ஜாயின் பண்ணினே?"

வனிதா, "எக்ஸாம் முடிஞ்ச கையோடு. வீட்டில் இருந்தா நான் விஸ்வாவை நினைச்சுட்டு வொர்ரி பண்ணிட்டு இருப்பேன்னு அத்தை உடனே ஜாயின் பண்ண ஏற்பாடு செஞ்சாங்க"

அமுதா, "வார் ஃப்ரண்டுக்குப் போன விஸ்வா எப்போ திரும்பி வந்தான்?"

வனிதா, "வார் ஃப்ரெண்டுக்குப் போய் ஒரு மாசத்தில் he was wounded. டெல்லி AIMSஇல் ட்ரீட்மெண்டுக்கு அட்மிட் ஆனார்"

அமுதா, "My God! என்ன ஆச்சு"

வனிதா, "ட்ரூப்ஸ் போறதுக்கு முன்னாடி சர்வே பண்ண போன சமயத்தில் artillery fire"

அமுதா, "ரொம்ப சீரியஸ்ஸா?"

வனிதா, "உடம்பில் சின்ன சின்ன காயம்தான். கல் முட்டியில் பெரிய அடி. ஆபரேட் பண்ணி சரி பண்ணினாங்க. பழைய நிலைமைக்கு காலில் பலம் வர ரொம்ப நாள் ஆகும்ன்னு சொன்னாங்க. அப்படியும் ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்க முடியாதுன்னு மெடிகல் ரிப்போர்ட் கொடுத்தாங்க. அதுக்கு அப்பறம் ஆக்டிவ் டியூட்டியில் இருக்க அவருக்கு ஃபிட்னஸ் இல்லைன்னு இங்கே பாங்களூர்லில் இருக்கும் ஆர்மி வொர்க் ஷாப்பில் போஸ்ட் பண்ணினாங்க. Desk Work. வேணும்ன்னா ரிஸைன் பண்ணவும் பர்மிஷன் கொடுத்தாங்க. விஸ்வாவுக்கு அதில் ரொம்ப வருத்தம். ஆர்மி வொர்க் ஷாப்பில் வொர்க் பண்ணிட்டே அவரும் M.B.A பண்ண முடிவெடுத்தார். ரெண்டு பேரும் ஒண்ணா பார்ட் டைம் எம்.பி.ஏ என்ரோல் பண்ணி ரெண்டு வருஷத்தில் முடிச்சோம். அவர் மார்கெட்டிங்க் எலக்டிவ் எடுத்து படிச்சார். நான் ஃபைனான்ஸ்ஸில் ஸ்பெஷலைஸ் பண்ணினேன்"

அமுதா, "வாவ், ரெண்டு பேரும் ஒண்ணா படிக்கறது ரொம்ப இன்டரெஸ்டிங்க்கா இருந்து இருக்குமே?"

வனிதா, "எலக்டிவ் சப்ஜெக்ட்ஸைத் தவிற எங்க ரெண்டு பேருக்கும் ஒரே சிலபஸ்தான். நான் தான் விழுந்து விழுந்து படிச்சேன். எல்லா சப்ஜெக்ட்ஸ்ஸும் அவருக்கு ஏற்கனவே தெரிஞ்சு இருந்தது"

அமுதா, "அப்படியா? எப்படி?"

வனிதா, "IMAவில் நிறைய மேனேஜ்மெண்ட்ஸ் சப்ஜெக்ட்ஸ் கவர் பண்ணி இருக்கார். அதைத் தவிற நிறைய அவரா இன்டரெஸ்ட் எடுத்து படிச்சு இருந்து இருக்கார்"

அமுதா, "ம்ம்ம் .. ரெண்டு பேரும் வொர்க் பண்ணிட்டே படிச்சு இருந்து இருக்கீங்க. உங்க ரொமான்ஸுக்கு டைம் கிடைச்சதா?"

வனிதா, "நான் எப்பவும் ரொம்ப ப்ளான் பண்ணி படிப்பேன். விஸ்வா என்னை விட நல்லா ப்ளான் பண்ணி படிப்பார். அவரோட ஃப்ரீ டைமில் என் அசைன்மெண்ட்ஸுக்கு ஹெல்ப் பண்ணுவார். வீக் எண்ட் ஜாலியா சுத்துவோம். அதைத் தவிற அவர் முழுசா ரிகவர் ஆகணும்ன்னு தினமும் காலையில் ரன்னிங்க் அல்லது ஸ்விம்மிங்க் போவார். நானும் கூட போவேன்."

அமுதா, "நீயும் ஓடுவாயா?"

வனிதா, "சில நாள் ஓடுவேன். இல்லைன்னா சைக்கிளில் கூடப் போவேன். கொஞ்சம் கொஞ்சமா இம்ப்ரூவ் பண்ணினார். He really struggled a lot. ஆனா அவரோட டிடர்மினேஷன் எனக்கு எல்லாம் நிச்சயம் வராது"

அமுதா, "ஏன் ரிகவர் ஆக அவ்வளவு நாள் ஆச்சு?"

வனிதா, "Knee jointஇல் இருக்கும் எலும்புகள் முறிஞ்சதால ஆபரேஷன் செஞ்சாங்க. ஆபரேஷன் முடிஞ்ச சமயத்தில் முழங்காலுக்கு அரை மணி நேரம் சிரமம் கொடுத்தா போதும். உடனே கால் முட்டியில் வீக்கம் வந்துடும். அதனால்தான் அவரை ஆக்டிவ் ஸர்வீஸ்ல இருந்து எடுத்தாங்க"

அமுதா, "இப்போ முழுசா ரிகவர் ஆயிட்டாரா?"

வனிதா, "முன்னே இருந்த அளவுக்கு ஆகலை. பட், இப்போ அவருக்கு லிமிட் ரெண்டு மணி நேரம். அதுக்கு பிறகு கால் முட்டி வீங்கிக்கும். பட், அந்தக் காலை வெச்சுட்டு ஹாஃப் மேரத்தான் (Half Marathon) கூட ஓடி ரெண்டு மணி நேரத்தில் முடிச்சு இருக்கார். போன வருஷம் கூட ஓடினார்"

அமுதா, "வாவ், நிஜமாவே அதுக்கு ரொம்ப டிடர்மினேஷன் வேணும். சரி, அப்போ எல்லாம் நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து சுத்தறதுக்கு உங்க அம்மா எதுவும் சொல்லையா?"
 

Mohan Ahuja

Active Member
1,339
266
63
வனிதா, "வேலைக்கு போக ஆரம்பிச்சதில் இருந்து அம்மா எதுவும் சொல்லலை" என்றவள் சிறு புன்னகையுடன், "ஆக்சுவலா, இனிமேலாவுது பொய் சொல்லாம விஸ்வாவோட வெளியில் சுத்துன்னு சொன்னாங்க"

அமுதா, "சோ, நீ செஞ்ச திருட்டுத்தனம் அவங்களுக்கு தெரிஞ்சு இருக்கு!"

வனிதா, "ம்ம்ம்.."

அமுதா, "ஒண்ணா சுத்துவீங்கன்னா? மூவி, டின்னர் அப்படின்னு போவீங்களா?"

வனிதா, "வாராவாரம் நிச்சயம் ஒரு மூவி இருக்கும். அப்பறம் எதாவுது ஷாப்பிங்க் பண்ணுவோம். நிச்சயம் எதாவுது ஒரு புக் ஷாப் போவோம். அப்பறம் எதாவுது காஃபி ஷாப்பில் உட்காந்து மணிக்கணக்கா பேசிட்டு இருப்போம்"

அமுதா, "ரெண்டு பேரும் நிறைய படிப்பீங்களா?"

வனிதா, "விஸ்வா fiction, non-fiction ரெண்டும் படிப்பார். அதுவும் ஆர்மியில் ஜாயின் பண்ணினதுக்கு பிறகு நிறைய non-fiction படிக்க ஆரம்பிச்சார். நான் mostly fiction தான் படிப்பேன். அவர் படிச்சுட்டு நல்லா இருக்குன்னு சொல்லற non-fiction மட்டும் படிப்பேன். வாங்கற சம்பளத்தில் பாதி புக்ஸுக்கு செலவு செய்யறீங்கன்னு அத்தை சொல்லிட்டே இருப்பாங்க"

அமுதா, "மணிக்கணக்கா பேசிட்டு இருப்போம்ன்னு சொன்னியே? என்ன பேசுவீங்க?"

வனிதா, "என் அஃபீஸில் நடக்கும் விஷயங்கள். நான் அந்த வாரம் நடந்ததை ஒண்ணு விடாம அவருக்கு ஒப்பிச்சுடுவேன். அதுக்கு அப்பறம் புக்ஸைப் பத்தி, ஸ்போர்ட்ஸ் பத்தி. இந்த டாபிக்ன்னு இல்லை. எந்த சப்ஜெக்டை எடுத்தாலும் விஸ்வாவோட அணுகுமுறை ரொம்ப வித்தியாசமா இருக்கும். சில சமயம் மணிக்கணக்கா ஆர்க்யூ பண்ணுவோம். அப்பறம் எதிர்காலத்தைப் பத்தியும் நிறைய பேசுவோம்"



அவள் மனத்திரையில் ஒரு காட்சி தோன்றியது ...

ஒரு காஃபி ஷாப்பில் அருகருகே அமர்ந்து இருந்தனர் ...

வனிதா, "இன்னைக்கு என் கூட வேலை செய்யற ஒரு லேடி தன் குழந்தையை ஆஃபீஸுக்கு கூட்டிட்டு வந்து இருந்தாங்க. ரெண்டு மணி நேரம் நான் எந்த வேலையும் செய்யலை"

விஸ்வா, "ஏன்?"

வனிதா, "ம்ம்ம் .. I was playing with that kid. You know I love having kids around"

விஸ்வா, "குழந்தைங்கன்னா உனக்கு அவ்வளவு பிடிக்குமா?"

வனிதா, "ஆமா. When they are kids"

விஸ்வா, "ம்ம்ம்"

வனிதா, "உனக்கு எத்தனை குழந்தைங்க வேணும்?"

விஸ்வா, "ரெண்டு"

வனிதா, "ஏன் ரெண்டே ரெண்டு?"

விஸ்வா, "ஏன் உனக்கு இன்னும் நிறைய பெத்துக்கணும்ன்னு இருக்கா?"

வனிதா, "எனக்கு அரை டஜன் குழந்தைங்க வேணும். அட் லீஸ்ட் நாலு"

விஸ்வா, "ட்வின்ஸா பிறந்ததுன்னா பெண்டு நிமிந்துடும்"

வனிதா, "அதனால தான் ஆறு, நாலுன்னு சொன்னேன்"

விஸ்வா, "ட்வின்ஸை பெத்து வளக்கறது எவ்வளவு சிரமம் தெரியுமா? அதுவும் நானும் ராமும் மாதிரின்னா நிச்சயம் ஏண்டா பெத்துகிட்டோம்ன்னு இருக்கும்"

வனிதா, "ஏன்?"

விஸ்வா, "இட் ஸீம்ஸ் நாங்க குழந்தைங்களா இருந்தபோது ரெண்டு பேரும் மாத்தி மாத்தி தூங்கி முழிச்சுக்குவோமாம். அதே மாதிரி நான் ரொம்ப நாள் தாய்ப்பால் குடிச்சுட்டு இருந்தேனாம். அவன் சீக்கிரம் சாலிட்ஸ் சாப்பிட ஆரம்பிச்சுட்டானாம். கொஞ்சம் வளந்ததுக்குப் பிறகு
சாப்பாட்டு விஷயத்தில் எங்க ரெண்டுக்கும் தனிதனி டேஸ்ட். அவனுக்குப் பிடிச்சது எனக்குப் பிடிக்காது. ஸ்டில் நானாவுது சகிச்சுட்டு சாப்பிடுவேன். நான் விரும்பி சாப்படற சில ஐட்டங்களை அவன் தொடவே மாட்டான். அம்மா ரெண்டு பேருக்கும் வேற வேற டிஷ்ஷஸ் செஞ்சு கொடுப்பாங்க. இன்னும் கொஞ்சம் பெரிசான பிறகு ஸ்போர்ட்ஸ், ஹாபீஸ் இந்த விஷயங்களிலும் அப்படித்தான். சொல்லப் போனா அவனுக்கு ஸ்போர்ட்ஸ் அவ்வளவா பிடிக்காது. நான் டென்னிஸ் கோச்சிங்க் க்ளாஸ் போறேங்கறதுக்காக அவன் க்ரிக்கெட் கோச்சிங்க் போவான். ரெண்டு பேரையும் வேற கேம்புக்குக் கூட்டிட்டுப் போய் விட்டு திரும்ப கூட்டிட்டு வர அப்பாவும் அம்மாவும் ரொம்ப கஷ்டப் படுவாங்க. வீட்டில் ரிலாக்ஸ்டா இருக்கும் போதும் அப்படித்தான். நான் கேரம் போர்ட் ஆடலாம்ன்னு சொன்னா அவன் போர்ட் கேம்ஸ் எதாவுது ஆடலாம்ன்னு சொல்லுவான். சோ, அப்பாவும் அம்மாவும் எங்க ரெண்டு பேர் கூட தனிதனியா ஆடுவாங்க."

வனிதா, "பயமுறுத்தறையா? ஸ்டில் .. எனக்கு ரெண்டு குழந்தைங்க போதாது"

விஸ்வா, "அப்படியா, முதல் ரெண்டுக்கு பிறகு சொல்லு"

அவன் தோளில் தலை சாய்த்து கனவு காணத் தொடங்கினாள் ...
அமுதா, "எதுக்காவுது சண்டை வந்து இருக்கா?"

வனிதா, "ஓ! பல விஷயங்களில், முக்கியமா என் ட்ரெஸ் விஷயத்தில் அவர் டேஸ்ட் எனக்கு பிடிக்காது. இருந்தாலும் எதையாவுது எடுத்துக்கோன்னு நிப்பார். எனக்கு வேண்டாம்ன்னு நான் பிடிவாதமா சொன்னதும் மூஞ்சியை தூக்கி வெச்சுட்டு இருப்பார். சில சமயம் கடைக்காரன் முன்னாடி ரூடா பேசுவார். எனக்கு ரொம்ப கோவம் வந்துடும்"

அமுதா, "சோ, திரும்பி வந்துடுவீங்களாக்கும்?"

ஒரு அளவுக்கு சகஜ நிலைக்கு வந்து முகத்தில் விரிந்த புன்னகையுடன் வனிதா, "ம்ம்ஹூம் ... சண்டைப் போட்டுட்டே ரெஸ்டாரண்ட் போவோம். அங்கே போய் உக்காந்துட்டு கண்டின்யூ பண்ணுவோம். கடைசில ரெண்டு பேரும் சாரின்னு சொல்லிட்டு ராசியாயிடுவோம்"

அமுதா, "Tell me. இது வரைக்கும் உங்க ரெண்டு பேருக்கு இடையில் வந்த பெரிய சண்டை எது?" என்று வாழைப் பழத்தில் ஊசியேற்றுவதைப் போல் கேட்டார்.

வனிதா, "Nothing"
 
Top