• If you are trying to reset your account password then don't forget to check spam folder in your mailbox. Also Mark it as "not spam" or you won't be able to click on the link.

Fantasy பருவத்திரு மலரே

balusai

Well-Known Member
60,654
37,593
173
என்ன நண்பர்களே கதைக்களம் நல்ல இருக்கா ?
அடுத்த பகுதிக்கு செல்வோமா
எனக்கு ஆதரவு கொடுங்கள்.

கதையையே படித்துவிட்டு உங்கள் கருத்தை மறக்காமல் தெரியப்படுத்துங்கள்
எனக்கு ஆதரவு கொடுங்கள்.
FRIENDS PLEASE LIKE THE POST AND REPLY COMMENT AND ENCOURAGE ME
 

balusai

Well-Known Member
60,654
37,593
173
பாட்டி தூங்கிவிட்டாள். ராசு இன்னும் வரவில்லை. பொருமையிழந்த பாக்யா.. படுக்கையை விட்டு எழுந்து வெளியே போனாள்.
கோமளாவைக் காணவில்லை. அவளது அம்மாவும். . ராசுவும் ஏதோ ஒரு விசயத்தை.. மிகத் தீவிரமாக விவாதித்துக்கொண்டிருந்தார்கள்.
பாக்யா பாத்ரூம் போய்விட்டு வந்து வாசலில் நின்றாள்.
லேசாகக் காற்று வீசிக்கொண்டிருக்க.. வானம் இருண்டிருந்தது.!
 

balusai

Well-Known Member
60,654
37,593
173


அவளைப் பார்த்த ராசு ”ஏன். ?” எனக் கேட்டான்.
வெறுமனே தலையசைத்தாள்.

கோவில் மேடையின் மறு பக்கம்.. படுக்கை விரித்து.. தூங்கத்தயாராகி… அவர்கள் பேசும் விசயதத்தை ஆர்வமாகக் கேட்டுக்கொண்டிருந்த தாத்தா அவளைப் பார்த்துக் கேட்டார்.
” ஏன் புள்ள. .?”
”ஒன்னுல்ல.. தாத்தா. .”
” பாட்டியா தூங்கிட்டாளா..?”
” ம்…!”
” நீயும் போய் படு போ..”
அவள் அங்கேயே நிற்க..
ராசு ” உக்காரு வா..” எனக்கூப்பிட்டான்.
அப்போதும் அவள் அங்கேயே நிற்க… கோமளாவின் அம்மா எழுந்தாள்.
”சரி போய் படுக்கலாம்..”
” ம்..” அவனும் எழுந்தான்.
 

balusai

Well-Known Member
60,654
37,593
173
‘ அப்பாடா..’ என நினைத்தாள் பாக்யா.
அவளருகே வந்த ராசு ”ஏன் தூக்கம் வல்லியா..?” எனக் கேட்டான்.
அவன் தோளை இடித்து..”இவ்வளவு நேரமா அரட்டை. ?” எனக் கேட்டாள்.
”ம்..!” அவள் கன்னத்தில் தட்டிவிட்டு பாத்ரூம் போனான்.

பாக்யா வீட்டிற்குள் போனாள். திண்ணைமீது தூங்கிக்கொண்டிருந்த பாட்டி நன்றாகக் குறட்டை விட்டுக் கொண்டிருந்தாள்.
பாக்யா போய் பாயில் படுத்தாள்.
உள்ளே வந்த ராசு ”அதிசயமாருக்கு..” என்றான்.
அவனைப் பார்த்தாள் ”என்ன.?”
”எனக்காக வெய்ட் பண்ணிட்டிருக்க போலிருக்க.?”
” ம்..”
” அட.. ஏன்..?” அவனுககாக அவள் விரித்து விட்டிருந்த பாயில் …அவனும் படுத்தான்
 

balusai

Well-Known Member
60,654
37,593
173
”நேத்து. . நைட்டு எங்க போன?”
” தெரியாத மாதிரி கேக்கற..?”
” நீ எதுக்கு போன..?”
” வேற என்ன பண்றது..? நீயும் என்னை வீட்டீக்குள்ள வரவேண்டாம்னு சொல்லிட்ட.. தூங்கவும் கூடாதுனு கன்டிசன் போட்டுட்ட..”
” நா.. ஒரு. .. இதுக்குத்தான் சொன்னேன். ..”
” நீ இதுக்கு சொன்னியோ.. இல்ல அதுக்கு சொன்னியோ.. ஆனா நா பண்ணது சேலஞ்ச்தான்..”
” ஆ.. பெரிய சேலஞ்சு..?”
” உன்னோட ஆளு வந்துருந்தான்..”
புரண்டு குப்புறப் படுத்தாள். ”அவன் சொல்லித்தான் எனக்கே தெரியும். .”
” எல்லா நியூஸும் வந்துருமே”
”காலைல உன்னக் காணம்னு.. கொஞ்சம் கவலப் பட்டேன்..”
” அப்படியா..?”
” என்ன லொப்படியா..? இந்த மேட்டர் மட்டும் கெழவிக்கு தெரிஞ்சிது… நான் தொலஞ்சேன்..”
 

balusai

Well-Known Member
60,654
37,593
173
”கவலப் படாத. . இது நம்ம ரெண்டு பேரத்தவற.. வேற யாருக்கும் தெரியாது..”
” நான் பயந்துட்டே இருந்தேன்”
” ஏன். .?”
” எங்க நீ.. ஆத்தாகிட்ட சொல்லிருவியோனுதான். ”
”ஏய். . இதெல்லாம் போய் சொல்லுவாங்களா..?”
”நீ கோமளாகிட்ட சொன்னாக்கூட போதும் வத்தி வெச்சிருவா..! சொல்லிடாத.. என்ன. .?”
”ம்.. ம்..”
திரும்பிப் படுத்தாள்.”இனிமே நான் தூங்கிருவேன்..”
”ஓ.. அப்ப பயத்துலதான் தூங்காம இருந்தியா..?”
”பயம்னு இல்ல..! பாவம்னுதான். .! உன்கூட பேசிடலாம்னு..!”
” ம்.. நல்லாத்தான் சமாளிக்கற.?” என அவள் பக்கம் சாய….
போர்வையால் போர்த்திக் கொண்டாள்.
திடுமென.”எனக்கென்னமோ.. டவுட்டா இருக்கு..” என்றாள்.
 

balusai

Well-Known Member
60,654
37,593
173
”என்ன டவுட்டு. .?”
அவன் பக்கமாகச் சரிந்தாள். ”கோமளா உன்ன லவ் பண்றானு நெனைக்கறேன். .”
” ஏய்.. அவ சின்னான லவ் பண்றா..”
” அது. . உனக்கெப்படி தெரியும். ?”
” அவதான் சொன்னா..”
” எப்ப. .?”
” நேத்துதான்..”
” ஓ..! ஆனா. . அவளுக்கு உன்மேலயும் ஒரு இது இருக்கு.”
”இது..சும்மா. . டைம் பாஸ்க்கு.! அவளேதான் சொன்னா.. சின்னானப் பத்தி. .”
”அவ நெறைய பொய் புளுகுவா..”
” உன்ன விடவா..?”
”நானா.? நான் என்ன பொய் சொன்னேன் உன்கிட்ட. .?”
”அதவிடு.. நேரமாச்சு.. தூங்கலாம்..”
”சொல்லு.. இல்லேன்னா எனக்கு மண்டையே வெடிச்சிரும்..”
” எனக்கு நேஞ்சே வெடிச்சிருச்சு.. நான் கேள்விப் பட்டப்ப…” என்றான்
 

balusai

Well-Known Member
60,654
37,593
173
சட்டென எழுந்து அமர்ந்தாள். ”என்ன சொல்லு..”
”அது வேனாம்.. பேசாம படு..”
அவனை முறைத்தாள் ” மொதல்ல நீ மேட்டருக்கு வா.”
”சொன்னா கேளு குட்டி. . அது வேனாம்..”
”ஏய். . சொல்லுடா..! அப்பறம் எனக்கு மண்டை காஞ்சிரும்..”



பெருமூச்செறிந்தான் ”உன்ன ரொம்ப நல்ல புள்ளன்னு நெனச்சேன்.. ஆனா. . கேள்விப்பட்டப்ப.. என்னால ஜீரணிக்கவே முடியல.. நீயா இப்படினு..”
” அப்படி என்ன கேள்விப் பட்டே என்னைப் பத்தி. .?”
” நீ ஒரு அப்பாவி.. சின்னப் புள்ளன்னுதான் நெனச்சிருந்தேன்..!”
” ஆ.. சீ.. சொல்லு..! ரொம்ப கடுப்பேத்தாத..” பொருமையிழந்து விட்டாள்.
 

balusai

Well-Known Member
60,654
37,593
173
ராசு சிரித்தவாறு. ” நீ பெரிய ஆளுதான். .” என்றான்.
”ஏய்.. சொல்லுடா.. எனக்கு மண்டை வெடிக்குது..” என்றாள்.
”வெடிக்கட்டும்.. எனக்கும் இப்படித்தான் பெரிய ஷாக்கா இருந்துச்சு. .”
நிஜமாகவே ஆவேசமாகிவிட்டாள். நகர்ந்து அவன் தோளில் அடித்தாள்.
”சொல்லுடா..”
சிரித்தான் ”ம்கூம். .”

அவனது தலைமயிரைப் பிடித்து உலுக்கினாள்.
” சொல்லல.. உன்னைக் கொன்னே போட்றுவேன்..”
 

balusai

Well-Known Member
60,654
37,593
173
அவன் கிண்டலாகச் சிரிக்க… அவள் மேலும் ஆவேசமானாள்.
” சொல்லு.. சொல்லு..” என அவனை உலுக்கினாள்.
எழுந்து உட்கார்ந்த ராசு அவள் கையை விலக்கிவிட.. அவள் மறுபடி அவன்மேல் பாய்ந்தாள். அவள் கைகளை இருக்கிப் பிடித்தான்.
அப்போதும் அவள் ஆவேசம் தனியவில்லை. அவனது கையைக் கடித்தாள்.
”ஏய்.. லூசு..” என அவளை மடக்கினான்.
”சொல்லுடா…நாயி..”
அவளை இழுத்து மடியில் போட்டு இருக்கினான்.
”ஏன் பேய் புடிச்சவளாட்டம் ஆடற..?”
தலைமுடி களைந்து. . மூக்கு விடைக்க.. ”சொல்லு..” என்றாள்.
”ம்கூம். .”
”சொல்லுடா…!” துள்ளினாள்.
”சரி பொருமையா இரு..”
”சீக்கிரம் சொல்லு..”
 
Top